Cinema Virumbi

October 3rd, 2008

அரிச்சந்திரனின் செல்பேசி

Posted by Cinema Virumbi in Kavithai

அரிச்சந்திர மகாராஜா,
இறங்கி வந்தார் பூமிக்கு.
வாங்கினார் ஒரு நோக்கியா.
கடையிலிருந்தே போட்டார் போன் சந்திரமதிக்கு;
“ஐ ஆம் இன் எ மீட்டிங்! திரும்பி வர லேட்டாகும்!”

சினிமா விரும்பி

(சமீபத்தில் வெப்துனியா தமிழில் வெளி வந்தது)

August 25th, 2008

எங்கோ படித்த சில கவிதைகள் (ஆசிரியர் பெயர் நினைவில் இல்லை)

Posted by Cinema Virumbi in Kavithai

ஈ மயில்!

இணையத்தில் சந்தித்த மயிலே!
உன் பெயர் எழுதி அனுப்பு ஒரு மெயிலே!

ஜாதி

வட்டத் தொட்டியில் குட்டை ஆலமரம்;
வாரிய வீடுகளிலும் ஜாதி குணங்கள்!

தாராளமயமாக்கல்

அதிர்ந்து போனாள் ஆயா!
அரைக்கீரை விற்கிறான் அம்பானி!

August 1st, 2008

பசுமைப் புரட்சி

Posted by Cinema Virumbi in Kavithai

மரம் வெட்டும்  தொழிலாளி   ஒதுங்கினான்  லாரி  நிழலில். 
முதலாளி  சொன்னார்  “இந்தாப்பா  கூலி ,  கடைசி மரத்துக்கு”

(சமீபத்தில் வெப்துனியா தமிழில் வெளி வந்தது)

July 31st, 2008

நடிகை பாவனாவைப் பற்றி ஒரு ‘பாவ்லா’ கவிதை!!

Posted by Cinema Virumbi in Kavithai

தாரகையே பாவனா,

உன் பற்றி கவிதை எழுதுமா என் பேனா?!
திரையுலகில் உண்டு ஏற்கனவே ஒரு மீனா,
அவருக்கு சரியான போட்டி இனி நீதானா?!
உன்னை ஒரு நாள் நேரிலே சந்திப்பேனா?
“மேடம், சூப்பர் உங்க படம்” என்று புகழ்வேனா?
இல்லை வெறும் வெள்ளித்திரையில் மட்டும் பார்ப்பேனா?
தினம் தினம் காண்பேனா ஒரு பகல் கனா?
உன்னை நேரில் காணும் ஆசையெல்லாம் போகுமா வீணா?!

July 30th, 2008

வாழிய வாலி புகழ்!

Posted by Cinema Virumbi in Kavithai

கவிஞர் வாலி
கற்பனைத் திறனில் இவர் ஒர் ஆழி
இன்னும் நூறாண்டு வாழி!
நீயும்தான் வாழ்த்தேன் தோழி!

படித்தோம் நாம் இராமாயணத்து 
வல்லவன் வாலி
மறைந்துதான் தாக்கினான்
காவியத் தலைவன் இராமனே அன்று

பார்க்கிறோம் இன்று நாம் கவிஞர் வாலி
மறைந்தோ மறையாமலோ
தெரிந்தோ தெரியாமலோ
குறிவைத்தோ வைக்காமலோ
யாரும் தாக்க முடியுமா இவரை?
காலம் தேய்க்க முடியுமா இவர் புகழை?

 சினிமா விரும்பி
(சமீபத்தில் வெப்துனியா தமிழில் வெளி வந்தது )