Cinema Virumbi

June 17th, 2009

‘Rocket Science!’

Posted by Cinema Virumbi in Comedy

__________________________________________

Nowadays, it is fashionable for people to
say ‘That’s no Rocket Science!’ whenever
they want to say that a certain subject
is not all that difficult. They overdo it
so much that I feel like shouting at them :

‘You idiot! Rocket Science itself is no Rocket Science!’

Cinema Virumbi

________________________________________________________________________

May 29th, 2009

பன்றிக் காய்ச்சலும் காட்டாமணக்கு இலையும்!

Posted by Cinema Virumbi in Comedy

(பன்றிக் காய்ச்சலும் துளசி இலையும் என்ற நேர்மையான பதிவிட்டவர் மன்னிக்கவும்!)

பன்றிக் காய்ச்சலைத் தவிர்க்கக் காட்டாமணக்கு இலை மிகச் சிறந்தது என்று எங்கோ படித்தேன்! நாலு காட்டாமணக்கு இலையை நெய்யில் நல்ல பொன்னிறமாக வதக்கி தினம் மூன்று வேளை சாப்பாட்டுக்கு முன்பு கொடுத்து வந்தால் ஜன்மத்துக்குக் காய்ச்சலே வராதாம்………………………. பன்றிக்கு!

சினிமா விரும்பி

May 13th, 2009

ஒரு தலைக் காதல் (அல்லது) கூடா நட்பு

Posted by Cinema Virumbi in Kavithai

நண்பர் ஒருவர் வாணி ஜெயராம் பாடிய ஒரு உருது கஜலை எனக்கு அனுப்பியிருந்தார். தமிழ் மொழிபெயர்ப்பை சற்று முயற்சித்துப் பார்த்தேன்!

ஒரு தலைக் காதல் (அல்லது) கூடா நட்பு
(ஒரிஜினல் பாடலாசிரியர் பெயர் தெரியவில்லை; தெரிந்தவர்கள் சொல்லவும்)

Hum Mein Aur Tum Mein Koi Baat Nahin Hai Lekin
Log Tho Jhoote Fasaane Bhi Ghada Karthe Hain
Milne Julne Mein Koi Harj Nahin Hai Aisa
Log Dil Ko Nahin Chehron Ko Pada Karthe Hain

Mera Dil Dekh Meri Shaklo-Shabahat Pe Na Ja
Sooratein Rang-e-Zamaana Se Badhal Jaati Hain
Mai Karoon Tum Se Mohabbat Ki Koi Baat Yaqeen Math Karna
Mu Se Bekaar Ki Baatein Bhi Nikal Jaati Hain
Log Dil Ko Nahin Chehron Ko Pada Karthe Hain

Ek Belaus Mohabbat Ko Yeh Duniyawaale
Husn-e-Masoom Ka Izhaar-e-Mohabbat Samjhe
Meri Baaton Ke Us Andaaz Ko Jaana Ikraar
Meri Khamosh Tabiyath Ko Nadamath Samjhe
Log Dil Ko Nahin Chehron Ko Pada Karthe Hain

Tu Mere Paas Sahi Phir Bhi Tu Mera Tho Nahin
Waqt Ne Tujh Ko Mere Paas Bihta Rakhkha Hai
Tere Dil Mein Tho Koi Aur Basa Hai Shayad
Chhodo Yeh Baat Ke Is Baat Mein Kya Rakhkha Hai
Log Dil Ko Nahin Chehron Ko Pada Karthe Hain

பெரும் பிழை ஏதும் இல்லை உன்னிடமோ அன்றி
என்னிடமோ ஆயின்
வெறும் வாயை மெல்லுவோர் அவல் கிடைத்தால் விடுவாரோ ?
சந்திப்பதிலோ பழகுவதிலோ அப்படி ஒன்றும் தவறு இல்லை;
மாக்கள் மனத்தை அல்ல முகத்தை அன்றோ படிக்கின்றார் !

என் மனதைப்பார் , முகவெட்டை அல்ல !
முகச்சாயல் எல்லாம் காலச் சுவடுகளால் மாறி விடுமே !
உன்னைக் காதலிக்கிறேன் என்ற எந்தப் பேச்சையும் நம்பாதே !
வெட்டி வார்த்தையும் சில சமயம் வாய்வழி வரத்தானே செய்கிறது !
மாக்கள் மனத்தை அல்ல முகத்தை அன்றோ படிக்கின்றார் !

ஊமைக்காதல் ஒன்றினை இவ்வுலகோர்
அழகி (ஆண் மயக்கி ?) ஒருத்தியின் அழைப்பென்று நினைத்தார்;
நான் பேசும் பாணியை இணக்கம் என்று திரித்தார்;
என் மௌனத்தை சம்மதம் என்று கதைத்தார்;
மாக்கள் மனத்தை அல்ல முகத்தை அன்றோ படிக்கின்றார் !

நீ என்னருகேதான் ஆயினும் என்னவன் இல்லையே !
காலம் உன்னை என்னிடம் அடமானம் அன்றோ வைத்தது;
(எப்போது வேண்டுமானாலும் மீட்டுக்கொள்ள !)
உன் உள்ளத்தில் வேறு எவளோ உறைகிறாள் போலும் !
விட்டுத் தள்ளு ! காதல் எனதுதானே ! உனக்கென்ன நஷ்டம் !
மாக்கள் மனத்தை அல்ல முகத்தை அன்றோ படிக்கின்றார் !

சினிமா விரும்பி

March 23rd, 2009

நேருவின் பேரனின் மகன்!

Posted by Cinema Virumbi in Katturai

அரசியலில் சிலர் சில சமயம் செய்வதறியாமல் என்னென்னவோ  செய்து விட்டு  மேலும் மேலும் தவறான பாதையிலேயே சென்று விடுகிறார்கள்! சமீபத்திய உதாரணம் வருண் ஃபிரோஸ் காந்தி! இந்தியாவின் பல பகுதிகளில், குறிப்பாகத் தென்னகத்தில் காந்தி, நேரு என்றால் தெய்வமாகக் கும்பிடும் பாரம்பரியம் பல்லாயிரம் குடும்பங்களில் உண்டு! துரதிர்ஷ்டவசமாக, 1980 இல் பிறந்த இவருக்கு இது தெரியாமலேயே போயிற்று! நேருவின் பேரன் என்ற ஒரே வாஞ்சைக்காக சஞ்சய் காந்தி செய்த நெருக்கடி காலக் கொடுமைகளையெல்லாம் 1977 இலும் 1980 இலும் அறவே புறந்தள்ளத் தயாராயிருந்தது கிட்டத் தட்ட முழு தென்னிந்தியாவும்! இன்றைய காங்கிரஸ் தலைமையுடன் ஒத்து வரா விட்டாலும் பரவாயில்லை, இவர் இந்திரா (போனால் போகிறதென்று சஞ்சய்!) பெயரால் ஏதாவது ஒரு லெட்டர் பேட் கட்சி நடத்தினால் கூட போதும்! நாளடைவில் மேலே வரலாம், மக்கள் வாய்ப்பளிப்பார்கள்! அதை விட்டு விட்டு ‘ நேருவின் பேரனின் மகன், இந்திராவின் பேரனா இப்படி?’ என்று பலரையும் முகம் சுளிக்க வைப்பதில் என்ன லாபம்? இவர் என்னதான் தலைகீழே நின்றாலும் இவரை ஒரிஜினல் BJP யாக யாரும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை! யாராவது இவருக்கு எடுத்துச் சொல்வார்களா?!

சினிமா விரும்பி

February 5th, 2009

‘ஹோட்டல் மாமியா A/C !’

Posted by Cinema Virumbi in Katturai

rprajanayahem.blogspot.com ல் சமீபத்தில் சில மாற்றங்களுடன் நான் இட்ட ஒரு பின்னூட்டம் :

சின்ன வயசில் (1971-72 இருக்கும் ), ஒரு நாள் இரவு, நானும் அப்பாவும் காலாற உஸ்மான் ரோடு, பாண்டி பஜார், ராஜகுமாரி தியேட்டர் என்று நடந்து போய்க் கொண்டிருந்தோம். அப்பா சொன்னார்: ” வாடா, ஹோட்டல்ல சாப்பிடலாம்”. நான் சொன்னேன்: ” அப்பா, நடிகர் A. கருணாநிதி ‘ஹோட்டல் மாமியா’ என்று ஒன்று இங்கேதான்பா எங்கேயோ நடத்தறார். இந்த வாரம் குமுதத்தில் பார்த்தேன்” . கொஞ்சம் கஷ்டப் பட்டுத் தேடிப் பிடித்துப் போனால், வாசலில் கலர் கலர் சாக் பீஸால் போர்டு போட்டிருந்தது : “கைம்மா உறுத்தல், ரஷ்ய உள்ளான் , காடை, கௌதாரி” என்று இன்னும் என்னென்னவோ! . அப்பா என்னை அடிக்காத குறைதான்! ” ஏண்டா நாசமாப் போறவனே! பேரப் பார்த்தாலே தெரியல, மிலிடரி ஹோட்டல் என்று?”. அப்புறம் ஒரு வழியாக ‘கீதா கபே’யோ ஏதோ ஒன்றில் மசால் தோசை முழுங்கி விட்டு வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தோம்! அந்த ரஷ்ய உள்ளானின் தலைவிதி , தமிழ்நாட்டில், தருமமிகு சென்னையில், தி.நகரில் வந்து மண்டையைப் போட வேண்டுமென்று! அதையோ, அதன் சந்ததியினரையோ , கபளீகரம் செய்யும் வாய்ப்பு பின்னாளில் கிடைக்காமலே போயிற்று! கெடுத்தார் அப்பா!

சினிமா விரும்பி

January 12th, 2009

காதோடுதான் நான் எழுதுவேன்!

Posted by Cinema Virumbi in Katturai

சமீபத்தில் ஒரே நாளில் இரண்டு காது (ஒரே நபருடையதல்ல! தனித் தனி!) சம்பந்தப் பட்ட செய்திகள் idlyvadai.blogspot.com ல் வெளி வந்தன.

‘சென்னையில் துப்புரவுத் தொழிலாளியின்  காது கிழிபட்டது   &
 பந்தயத்தில் தோற்ற பின் ரூ 50/- தராததால் நண்பரின் (!) காதைக் கடித்துத் துப்பிய வாலிபர்’

இதற்கு நான் இட்ட பின்னூட்டம் கீழே:
 

இப்படியும் இருக்குமா? சே! சே! இருக்காது !
இதில் ஏதோ சூது வாது கீது!
இதைப் படிப்பவர் மனம் நிஜமாகவே உருகாது?
அமைதி விரும்பும் தமிழ்நாட்டுக்கு இது அடுக்காது!
ஐயோ! இந்தக் கொடுமையை எல்லாம் இன்னும் கேட்டுக் கொண்டிருக்கிறதே என் காது!
ஞாபகம் வருதே தினம் தூங்கும் போது!
தெலுங்குக்காரர் யாராவது சொல்லக் கூடாதா? ‘இதி நிஜம் காது ‘
பிரச்னையைத் தீர்க்க யாராவது போனார்களா தூது?
சரி, இப்போ எப்படியிருக்கு கிழிஞ்ச ரெண்டு பேர் காது?

சினிமா விரும்பி

December 24th, 2008

Dr CNA பரிமளம்

Posted by Cinema Virumbi in Katturai

பள்ளி நாட்களில் மேற்கு மாம்பலம் லேக் வியூ ரோடில் ‘Dr CNA பரிமளம் MBBS’ என்ற போர்டு தொங்கும்  ஒரு எளிமையான கிளினிக்கைப்  பார்த்ததுண்டு. டாக்டரை நேரில் பார்க்கா விட்டாலும் ‘அறிஞர் அண்ணாவின் வளர்ப்பு மகனுக்கு இவ்வளவு ஆடம்பரமற்ற கிளினிக்கா?’  என்று நானும் நண்பர்களும் வியந்ததுண்டு. சமீபத்தில் , முதுமையில் , நோயின் உபாதை தாங்க முடியாமல் அவர் தன் வீட்டுக் கிணற்றில் விழுந்து உயிர் நீத்தார் என்று படித்த போது மனம் வலித்தது. நிச்சயமாக வறுமை  ஒரு காரணமே  இல்லை என்றாலும் MGR இன் ‘நேற்று இன்று நாளை’ படத்தில் வரும் ‘ தம்பீ நான் படிச்சேன் காஞ்சியிலே நேற்று.. ‘ பாடல் நினைவுக்கு வந்தது:

‘நாட்டுக்காக உழைப்பதற்கே   அண்ணா பிறந்தார்;
பொது நலத்தில்தானே நாள் முழுக்க  கண்ணாயிருந்தார்;
ஏற்றுக் கொண்ட பதவிக்கெல்லாம் பெருமையைத் தந்தார்;
தம் இனிய குடும்பம் ஒன்றுக்குத்தான் வறுமையைத் தந்தார்! ‘

சினிமா விரும்பி

December 16th, 2008

இந்த BJP பெருசுங்க லொள்ளு தாங்க முடியலப்பா! (ஒரு கற்பனை உரையாடல்)

Posted by Cinema Virumbi in Katturai

( சமீபத்திய தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு  idlyvadai.blogspot.com ல் ஒரு பதிவில்  பின்னூட்டமாக என்னால் சில மாற்றங்களுடன் பதியப் பட்டது)

அத்வானி: எழவு , ஒரு பார்முலாவும் ஒர்க் அவுட் ஆவ மாட்டேங்குது ! போன வாட்டி ‘India Shining’ னு சொன்னோம்; நமக்கே ஷூ பாலிஷ் போட்டுட்டானுங்க! சாமியார் , சாமியாரிணி, சினிமா நடிகர்னு யாரைக் காமிச்சாலும் ஓட்டு விழ மாட்டேங்குது!

வெங்கையா நாயுடு : இந்த வாட்டி , தீவிரவாதம்னு பூச்சாண்டி காட்டினோம்  ! மாப்பு, வச்சிட்டாங்கையா ஆப்பு!

 அருண் ஜெட்லி: போன வாட்டியே ஆட்சியில்  இருந்த  ஆறு வருஷத்துல எல்லா அரசு நிறுவனத்தையும் தூக்கி தனியாருக்குத் தாரை வார்த்திருக்கணும்! கோட்டை விட்டுட்டோம்! இனிமே நாம என்னிக்கு ஜெயிச்சு, நான் என்னிக்கு disinvestment மந்திரி ஆகி … விடிஞ்சுரும்!

ராஜ் நாத் சிங்: நமக்கு ஜாதகம் சரியில்லைய்யா! என்ன சொன்னாலும் ஜனங்க நம்புவேனான்றாங்க! டெல்லில பத்து வருஷம் ஆனாலும் காங்கிரசே தேவலைன்றாங்க! பழைய வெங்காய வெலைய மறக்க மாட்றாங்க!

வெங்கையா நாயுடு : ராஜஸ்தான்ல யாரோ மகாராணியை எல்லாம் ப்ரொஜெக்ட் பண்ணிப் பார்த்தோம் , பாச்சா பலிக்கலை!

ஜஸ்வந்த் சிங்: யாரங்கே? கொஞ்சமா ஓப்பியம் போட்டு ஒரு டீ கொண்டா.

அத்வானி: குறுக்குச்சால் ஓட்டறது நம்ப பார்ட்டில ரொம்ப ஜாஸ்திய்யா ! மதன் லால் குரானா , உமா பாரதி ,கல்யாண் சிங், இப்போ மீணான்னு ஒரு ராஜஸ்தான் மந்திரி, சொல்லிக்கிட்டே போகலாம் .

வேறு ஒருவர்: (மனதுக்குள்) வாஜ்பாய்க்கு எதிரா நீங்க ஓட்டறா மாதிரியா?!

வெங்கையா நாயுடு : அது  மட்டுமா? காரியம் ஆனதும் கழட்டி உடறது, ஊமைக் காயம்  வர்றா மாதிரி அடிக்கறது , இதிலெல்லாம் நம்ப பார்ட்டி  ஆளுங்க கில்லாடியாச்சே! குரானா, உமா பாரதி, கல்யாண் சிங் , பங்காரு லக்ஷ்மண்  , கோவிந்தாச்சார்யா  எல்லாரையும் எப்படி smooth ஆ கழட்டி உட்டோம்!

அருண் ஜெட்லி: அது என்ன ஜுஜுபி! ஓட்டுப் போட்டதும் ஒட்டு மொத்தமா ஜனங்களையே கழட்டி உட்டோமே அதை விடவா?!

அத்வானி: ‘கிடக்கிறது கிடக்கட்டும், கிழவியைத் தூக்கி மணையிலே வை’ என்கிற மாதிரி இந்த பைரோன் சிங் ஷெகாவத் வேற நான்தான் பிரதமர் என்கிறாரு ! 2009 க்கு என்னதான்யா வழி?!

அருண் ஜெட்லி: அயோத்யா, ராமர் பாலம், மத மாற்றம், வெல வாசி, 123 ஒப்பந்தம், தீவிரவாதம் ….

வெங்கையா நாயுடு : …… ரியல் எஸ்டேட் ஏற்றம், ஷேர் மார்க்கெட் சரிவு , அது இது எல்லாத்தையும் போட்டுக் கலக்கி வைப்போம்! அதுக்குள்ள இந்தப் பாழாய்ப் போன ஜாதகமும் கொஞ்சம் மாறித் தொலைக்குதா பார்ப்போம் !

எல்லோரும்: ஜெய் ஸ்ரீ ராம்!

December 1st, 2008

அஞ்சலி…

Posted by Cinema Virumbi in Katturai

 தினந்தோறும் நாம் எதிர்கொள்ளும் தமிழ், தெலுங்கு , மராத்தி , ஹிந்தி, பஞ்சாபி, வங்காளம் போன்ற மொழி/ மாநில ரீதியான பேதங்களையோ அல்லது இன்னும் உக்கிரமான ஜாதி, மத ரீதியான வேறுபாடுகளையோ இம்மியளவும் நினைக்காமல், இந்திய நாட்டின் இறையாண்மையைக் காக்கவும், வெளிநாட்டோர் உள்ளிட்ட பல மனித உயிர்களைக் காக்கவும், தம் உயிரைத் துச்சமாக மதித்துப் போராடிய வீரர்களுக்கு வணக்கம்! இந்தப் புனித வேள்வியில் உயிர் நீத்த வீரர்களுக்கும் தீவிரவாதிகளின் வெறித் தாக்குதலில் உயிரிழந்த பொதுமக்களுக்கும் கண்ணீர் அஞ்சலி!

சினிமா விரும்பி 

*******************************************************

Tribute…

Salutations to the heroes who fought without thinking a vee bit about the differences based on language/ state such as Tamil, Telugu, Marathi , Hindi, Punjabi , Bengali etc., faced by us everyday, or the still harsher differences based on caste/ religion, in order to protect the sovereignty of the Indian nation and to save several human lives including those of foreigners, caring least for their own lives! Tearful tributes to the soldiers who lost their lives in this holy tapasya and the common people who perished in the rabid attack of the terrorists!

Cinema Virumbi  

*******************************************************

November 19th, 2008

சனிமூலை!

Posted by Cinema Virumbi in Katturai

நண்பர் ஒருவர், திரு. யதார்த்தா பென்னேஸ்வரன், நாடகத்துறையில் மிகுந்த ஈடுபாடு உள்ளவர். கிட்டத்தட்ட சாமி வந்த  உத்வேகத்துடன் ‘வடக்கு வாசல்’ என்ற மாத இதழைத் தன்னந்தனியாக தில்லியிலிருந்து மூன்று ஆண்டுகளாக நடத்தி வருகிறார். சஞ்சயன்,வியாசன், அங்கதன், ராகவன் தம்பி என்ற பல புனை பெயர்கள் அவருக்கு உண்டு! வடக்கு வாசலின் கடைசி மூன்று பக்கங்களில் ராகவன் தம்பி என்ற பெயரில் அவர் எழுதும் ‘சனிமூலை’ கட்டுரை நான் மிகவும் விரும்பிப் படிப்பவற்றுள் ஒன்று. அது பற்றிய என் கவிதை கீழே:

சனிமூலை,

வாசகர் நெஞ்சில் நீங்கா  இடம் பெற்ற தனி மூலை;
கருத்தாழத்தில் நுனிப்புல் மேயாத மூலை;
வடக்கு வாசலைப் பின் அட்டையிலிருந்து படிக்கத் தூண்டும் நவரசக் கனிமூலை;
Fast food விரும்பிகளுக்கு நல்ல நொறுக்குத் தீனி மூலை!

http://www.vadakkuvaasal.com/
http://sanimoolai.blogspot.com/

சினிமா விரும்பி

Next Page »