சனிமூலை!

November 19th, 2008

நண்பர் ஒருவர், திரு. யதார்த்தா பென்னேஸ்வரன், நாடகத்துறையில் மிகுந்த ஈடுபாடு உள்ளவர். கிட்டத்தட்ட சாமி வந்த  உத்வேகத்துடன் ‘வடக்கு வாசல்’ என்ற மாத இதழைத் தன்னந்தனியாக தில்லியிலிருந்து மூன்று ஆண்டுகளாக நடத்தி வருகிறார். சஞ்சயன்,வியாசன், அங்கதன், ராகவன் தம்பி என்ற பல புனை பெயர்கள் அவருக்கு உண்டு! வடக்கு வாசலின் கடைசி மூன்று பக்கங்களில் ராகவன் தம்பி என்ற பெயரில் அவர் எழுதும் ‘சனிமூலை’ கட்டுரை நான் மிகவும் விரும்பிப் படிப்பவற்றுள் ஒன்று. அது பற்றிய என் கவிதை கீழே:

சனிமூலை,

வாசகர் நெஞ்சில் நீங்கா  இடம் பெற்ற தனி மூலை;
கருத்தாழத்தில் நுனிப்புல் மேயாத மூலை;
வடக்கு வாசலைப் பின் அட்டையிலிருந்து படிக்கத் தூண்டும் நவரசக் கனிமூலை;
Fast food விரும்பிகளுக்கு நல்ல நொறுக்குத் தீனி மூலை!

http://www.vadakkuvaasal.com/
http://sanimoolai.blogspot.com/

சினிமா விரும்பி

The End

Boom!Boom!

November 11th, 2008

Recently, I gathered the courage to decipher the lyrics of the Adnan Samy(AS)-Sadhana Sargam(SS) number ‘Boom Boom’ from Shankar’s ‘Boys’ (Released sometime in 2003 but was dogged by controversies from day one till it vanished from the halls in a jiffy! The Telugu version, surprisingly, was a super duper hit which launched one of the heroes, Siddharth, into a big league in Tollywood! I understand, in true Shankar style, they used 32 cameras for filming this song!). It goes something like this:

AS:Boom Boom shakrathaam shakrathaam thakka….…
SS: Kaathal athuthaan ithuthaan enRE kEtkumaa?
Kaathal idhayam ethaiyum ethirpaarkkumaa?

AS: MuLLin mElE kaakkaik kunju thoongavillaiyaa?
Kuppai mEttil rOjaa chedi pooppathillaiyaa?

SS:kotaanguchchik koorai pOthum, nam kaathal vaazhum;
thanga paspam thEvaiyillai thaNNeerE pOthum.

AS:kaathal nuzhainthaal kaaylaan kadaiyum KOlaar vayalaagum.

SS: Ottai udaisal kaathal nuzhainthaal pullaanguzhalaagum.

AS:maram izhaiththa suruL viriththu malarp padukkai seyvOm.

SS: kazhuththu aganRa (or mugam udaintha or some such thing) bottle-kkuL agal viLakkaay vaazhvOm.

AS:kaaLaan kudaikkuL kattith thazhuvum attai ena vaazhvOm.

SS: noolaam padaiyil poochchi iraNdaay oonjal aadi vaazhvOm.

AS: mazhai kuzhaiththa sERRinilE maN puzhukkaL nee naan.

SS: azhugi vitta maambazhaththil iru vaNdugaL naamthaan.

(I have done something similar to what they did in ‘Jurassic park’ i.e., use some filler material in the form of the DNA print of a frog to recreate that of a dinosaur! May be, given some more time, I can recreate the original T-Rex in all its pristine glory!)

I should say the following positive things first:

I liked the music and the novelty of using Adnan Samy’s voice in a Tamil song. To be fair to her, SS comes out with a decent enough Tamil pronunciation in this song. (She even gets a pass mark in ‘zha’. AS too has mustered the courage to say something like ‘zhhhha’!) It will be too much to expect the correct ‘thanga baspam’ as against ‘thanga paspam’ as pronounced by them, as there are much bigger bloopers!

Now, I don’t know the context of the lyrics. I couldn’t make out what they are trying to say. (By the way, are they admitting that this song is an ‘Ottai udaisal’ which is lapped up as a flute recital by the diehard fans?!)

This song raises some basic issues. Are lyrics (which demand good pronunciation) absolutely irrelevant? At this rate, one might as well bring Michael Jackson and make him mouth something remotely sounding like Tamil! If it is only for the novelty aspect, why didn’t they restrict AS from saying anything beyond ‘Boom Boom shakrathaam shakrathaam thakka…’ which he seems to excel in!

As Ramesh Prabha of (Ex) Sun TV once said, these are not Tamil songs but Tamil ‘maadhiri’ songs!

Cinema Virumbi 

Published with some minor changes in Zine5.com sometime back

The End

பாரதி என்றொரு கவிஞன்

October 7th, 2008

சமீபத்தில் ஒரு இணையதளத்தில் மகாகவி சுப்ரமணிய பாரதியாரைப் பற்றி சில விமரிசனங்கள் எழுதப் பட்டிருந்தன. நான் எழுதிய பதில்கள் அதே தளத்தில் உடனே வெளியிடப்பட்டன. அவை இதோ கீழே:

பாரதி என்ற ஈடிணையற்ற கவிஞன் ஆங்கிலேயரை எதிர்க்காமல் சுக வாழ்வு கண்டிருக்கலாம். ராவ் பஹதூர் பட்டத்தை வாங்கிக் கொண்டு பங்களா, கார் என்று இக பர சுகங்களையெல்லாம் அனுபவித்திருக்கலாம். வாழ்நாள் முழுக்க பிடுங்கித் தின்ற வறுமையையும் இறுதி ஊர்வலத்தில் இருபது பேருக்கும் குறைவாய் இருந்த அவலத்தையும் தவிர்த்திருக்கலாம். ஏன், நல்ல மருத்துவம் பார்த்து அந்தப் பாழாய்ப் போன மரணத்தையே கூட இன்னும் சில பத்தாண்டுகள் தள்ளிப் போட்டிருக்கலாம். தன் ஒரே பெண் குழந்தையின் திருமணத்துக்குக் கூட சேகரித்து வைக்காத பிழைக்கத் தெரியாத மூடனாய் இருந்திருக்க வேண்டாம்! யாராவது கேட்டால் எனக்கு தேச சுதந்திரம் முக்கியமல்ல! அதை விட முக்கியம் சமுதாய மறுமலர்ச்சி அதற்காகப் போராடுகிறேன் என்று சொல்லி ஆங்கிலேயரிடமிருந்து சாமர்த்தியமாகத் தப்பியிருக்கலாம். சுதந்திரம் கிடைத்த பிறகும் தன் கவித்திறனைக் கொண்டு ஏழு தலைமுறைக்கு சொத்து சேர்த்திருக்கலாம். பழைய ஆவணங்களைத் தோண்டி எடுக்க ஆரம்பித்தால் எந்தக் காவிய நாயகனும் அப்பழுக்கற்று வெளி வருவது கடினம். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திலிருந்து தப்பி ஒருவர் பாண்டிச்சேரிக்குச் செல்வதை ஒரு யுத்த தந்திரமாகத்தான் கொள்ள வேண்டும். அனைவருமே சிறை சென்று மடிந்து இயக்கமும் மண்ணாய்ப் போக வேண்டுமென்ற அவசியமில்லை. மகா கவிஞன் மீது சுலபமாக சுட்டு விரலை நீட்டுவோர் தானோ தன் மூதாதையரோ சுதந்திர வேள்வியில் என்ன பங்கேற்றோம் என்று சற்றே சிந்திக்கட்டும்.

இவையெல்லாம் ஒரு புறமிருக்க , பாரதியின் பாடல்களில் உள்ள விடுதலை வேட்கையையோ அவை தமிழரிடம் ஏற்படுத்திய யுகப் புரட்சியையோ இந்த ஆவணங்கள் எள்ளளவும் குறைக்கப் போவதில்லையே!
**************************************************************************

நூறு ஆண்டுகளுக்கு முன்பு பாரதியின் வகுப்பினரிடம் இயல்பாகவே இருந்த வடமொழி வாஞ்சை பாரதியிடமும் இருந்திருந்தால் அது பஞ்சமா பாதகம் இல்லை! அது தமிழுக்கு அவர் செய்த துரோகமும் இல்லை! மேலும் , பாரதி போன்ற ஒரு கவிஞனுக்குத் தாய்மொழி தவிர நான்கைந்து மொழிகளில் பரிச்சயமும் புலமையும் இருப்பது சகஜம்தான். அப்படி இல்லையென்றால்தான் அது அதிசயம்! பாரதி வாரணாசி, பாண்டிச்சேரி போன்ற பல இடங்களில் வாழ்ந்திருக்கிறார் என்பதையும் ‘யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் ’ என்று ஆணித்தரமாக உரைத்திருக்கிறார் என்பதையும் நினைவில் கொள்ளவும்.

**************************************************************************
நான் முன்பே சொன்னது போல் நிஜ மாந்தர்கள் சற்றே ஏறக்குறையத்தான் இருப்பார்கள். நாம் விரும்பும் சகல விதமான கல்யாண குணங்களும் ஒருங்கே அமைந்த ஒரு கவிஞன் வேண்டுமென்றால் அது கற்பனையில் மட்டுமே சாத்தியம்!

 **************************************************************************

ஜஸ்டிஸ் கட்சியோ அல்லது அதற்கு முந்தைய பிராமணரல்லாதார் பிரகடனமோ முதல் முதல் துவங்கப்பட்ட போது அதே இயக்கம் பின்னாளில் திராவிட இயக்கமாகப் பரிணாம வளர்ச்சியுற்று சமுதாய ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் இவ்வளவு மகத்தான வெற்றிகளைப் பெறும் என்று பலரும் எதிர்பார்க்கவில்லை. குறிப்பாக, பாரதியைப் போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்கள், ஆங்கிலேயரை ஆதரிக்கும் இந்த இயக்கம் விரைவில் மங்கி விடும் என்றும் சுதந்திரப் போராட்டம்தான் நிலைத்து நிற்கும் என்றும் மனப்பூர்வமாக நம்பினார்கள். அன்றைய சூழ்நிலையில் அது அவர்களின் கணிப்பு . அவ்வளவுதான்! கணிப்புகள் தவறாகலாம்! இதில் பாரதியை மட்டும் தனிமைப் படுத்தி அவர் தலையை மட்டும் ஏன் ஐயா உருட்டுகிறீர்கள்?!

**************************************************************************

பாரதி போன்ற உணர்ச்சிப் பிழம்பான படைப்பாளிகள் பல விஷயங்களில் எஃகு போன்ற உறுதியான நிலைப்பாட்டில் இருப்பதில்லை!  குறிப்பாக இந்தப் பெண்ணியம் சார்ந்த சிக்கலான விஷயங்களில் பாரதி ஒரு கால கட்டத்தில் மிகவும்  புரட்சிகரமாகவும்  பின்னாளில் சற்றே நடைமுறைக்குகந்த மாதிரியும் சிந்தித்திருப்பார் போல் உங்கள் கட்டுரையிலிருந்து தெரிகிறது. முழுக்க முழுக்க முரண்படாத வரையில், என்னைப் பொறுத்தவரை இது மன்னிக்கக் கூடிய சிறு குறைபாடுதான்.  அந்த நாளிலேயே ஒரு தமிழ்க் கவிஞன் பெண் விடுதலையின் பல்வேறு பரிமாணங்களை இவ்வளவு ஆழமாக ஆராய்ந்திருக்கின்றானே என்ற பிரமிப்புதான்  எனக்கு ஏற்படுகிறது! அதை விடுத்து  ‘ஆஹா பார்த்தீர்களா  பாரதியின் போலித்தனத்தை?’ என்பது போன்ற தலைப்பும் வெறுப்பைக் கக்கும் சொற்பிரயோகங்களும் கட்டுரையின் நம்பகத்தன்மையைக் கணிசமாகக் குறைக்கின்றன.
 

The End

அரிச்சந்திரனின் செல்பேசி

October 3rd, 2008

அரிச்சந்திர மகாராஜா,
இறங்கி வந்தார் பூமிக்கு.
வாங்கினார் ஒரு நோக்கியா.
கடையிலிருந்தே போட்டார் போன் சந்திரமதிக்கு;
“ஐ ஆம் இன் எ மீட்டிங்! திரும்பி வர லேட்டாகும்!”

சினிமா விரும்பி

(சமீபத்தில் வெப்துனியா தமிழில் வெளி வந்தது)

The End

எங்கோ படித்த சில கவிதைகள் (ஆசிரியர் பெயர் நினைவில் இல்லை)

August 25th, 2008

ஈ மயில்!

இணையத்தில் சந்தித்த மயிலே!
உன் பெயர் எழுதி அனுப்பு ஒரு மெயிலே!

ஜாதி

வட்டத் தொட்டியில் குட்டை ஆலமரம்;
வாரிய வீடுகளிலும் ஜாதி குணங்கள்!

தாராளமயமாக்கல்

அதிர்ந்து போனாள் ஆயா!
அரைக்கீரை விற்கிறான் அம்பானி!

The End

பசுமைப் புரட்சி

August 1st, 2008

மரம் வெட்டும்  தொழிலாளி   ஒதுங்கினான்  லாரி  நிழலில். 
முதலாளி  சொன்னார்  “இந்தாப்பா  கூலி ,  கடைசி மரத்துக்கு”

(சமீபத்தில் வெப்துனியா தமிழில் வெளி வந்தது)

The End

குப்பை மகாத்மியம் !

July 31st, 2008

சமீபத்தில்  (Aug 2007 ல்!!!!!) பத்து  நாட்கள்  சென்னைக்குச்  செல்ல  நேர்ந்தது . முன்பு மேயர்  திரு. மு.க. ஸ்டாலின்  காலத்தில்  துவங்கப்பட்ட  சிங்கப்பூர் நிறுவனம் ஓனிக்ஸ்  உடனான  7 ஆண்டு ஒப்பந்தம்  முடிவடைந்து  விட்டதால் , மற்றொரு  நிறுவனமான  நீல்  மெட்டல்ஸ்  பனால்காவுடன்  அரசு  புதிய  ஒப்பந்தம்  செய்து  கொண்டுள்ளது .  ஆனால்  பழைய நிறுவனம் விட்டுப் போகும் போது   குப்பை வாரும்  மற்றும்  அழுத்திச்  சுருக்கும்  இயந்திரங்களையும்  பெரிய  சைஸ்  குப்பைத்  தொட்டிகளையும்  தன்னுடன்  எடுத்துச்  சென்று  விட்டதாகக்  கூறுகிறார்கள் . துரதிர்ஷ்டவசமாக  புதிய  நிறுவனம்  ஒப்பந்தத்தில்  கையெழுத்திட்டு  விட்டதே  தவிர  ‘ நான்  ரெடி , நீங்க  ரெடியா ? ’ என்று  கேட்கும்  தயார்  நிலையில்  இல்லை ! விளைவு : தருமமிகு  சென்னை  முழுவதும்  குப்பையோ  குப்பை ! இத்தனை  டன்  குப்பைகளை  நாம்தான்  தினமும்  உற்பத்தி  செய்கிறோமா  என்று  சென்னைவாசிகளே  அருவருப்புடன்  பிரமித்தார்கள் ! இருப்பதிலேயே  சுலபமான  காரியம்  என்பதால்  அனைவரும் மூக்கைச்  சுருக்கினார்கள் ! சில  இடங்களில்  எதிர்க்கட்சியினர்  குப்பை  அள்ள  முயற்சிக்க , போலீஸ்  அவர்களைத்  தடை செய்ய  ஏகக்  களேபரம் போங்கள் ! நல்ல  வேளையாகக்   கிளிப்பச்சை   நிறச்    சீருடைகளோடு  களத்தில்  இறங்கிய  நீல்  நிறுவனத்  துப்புரவுத்  தொழிலாளர்கள்  கொஞ்சம்  கொஞ்சமாகக் குப்பை  அள்ளலின்  வேகத்தை  அதிகரித்துச்  சென்னை  மாநகரை  முடை  நாற்றத்திலிருந்து  காப்பாற்றினார்கள் ! சகஜ  நிலை திரும்பியதென்று  பொதுமக்களும்  நிம்மதிப்  பெருமூச்சு  விட்டார்கள் ! வருங்காலத்தில்   அரசு  வருமுன் காப்பது  நலம்!

The End

நடிகை பாவனாவைப் பற்றி ஒரு ‘பாவ்லா’ கவிதை!!

July 31st, 2008

தாரகையே பாவனா,

உன் பற்றி கவிதை எழுதுமா என் பேனா?!
திரையுலகில் உண்டு ஏற்கனவே ஒரு மீனா,
அவருக்கு சரியான போட்டி இனி நீதானா?!
உன்னை ஒரு நாள் நேரிலே சந்திப்பேனா?
“மேடம், சூப்பர் உங்க படம்” என்று புகழ்வேனா?
இல்லை வெறும் வெள்ளித்திரையில் மட்டும் பார்ப்பேனா?
தினம் தினம் காண்பேனா ஒரு பகல் கனா?
உன்னை நேரில் காணும் ஆசையெல்லாம் போகுமா வீணா?!

The End

கால் சென்டர் கலாசாரம்

July 31st, 2008

கடந்த  மூன்றாண்டுகளில்  அவ்வப்போது  சர்ச்சைக்குரிய  கருத்துக்களை  வெளியிட்ட  போதிலும் , இந்த  BPO எனப்படும்  கால் சென்டர் விஷயத்தில்  மத்திய  சுகாதார  அமைச்சர்  சொல்லியிருப்பது  நூற்றுக்கு   நூறு  உண்மை! சொல்லப் போனால்  அவர்   சொன்னது  கொஞ்சம், எவரையும்  புண்படுத்த  வேண்டாமென்று  சொல்லாமல்  விட்டது  மிக  அதிகம்!

கால் சென்டர்களை    ஆதரிப்பவர்களின்  தரப்பு  வாதம்  என்னவென்றால்
“ எந்த  ஒரு நன்மையும்  சமூகத்தில்  காலடி  எடுத்து  வைக்கும்  போது  கூடவே  நாலு  தீமையும்  நுழையத்தான்   செய்யும் ! நாம்தான்  ஜாக்கிரதையாக  இருக்க  வேண்டுமே தவிர  ஒரேயடியாக  அந்த  நன்மைக்கே  முட்டுக்கட்டை  போடுவது  கடைந்தெடுத்த  பத்தாம்  பசலித்  தனம் !” ‘பழையன  கழிதலும்  புதியன  புகுதலும் ’ வரவேற்க  வேண்டியவையே  என்று  நம் பெரியவர்களே  சொல்லவில்லையா ?’  “Work hard, Party hard! (கடினமாக  உழை ! மிகக்  கடினமாக பார்ட்டி  கொண்டாடு !) என்ற  கொள்கை உடையவர்கள்  இந்தத்  துடிப்பு  மிகு  இளைஞர்கள் ! இதில்  என்ன தவறு? இரண்டு மூன்று  தலைமுறை பழசாய்ப்  போனவர்களெல்லாம்  பொறாமையில்  மூக்கைச் சிந்தி  ஒப்பாரி  வைக்கலாமா ?”

மேலெழுந்தவாரியாக  நியாயம்   போல் தோன்றும்  இந்த வாதங்களில்  பூசி  மெழுகப்படும்  விஷ(ய)ங்களை  நாம் கூர்ந்து  நோக்க  வேண்டும் ! வேலைக்குச்   சேர்ந்த  முதல்  மாதத்திலேயே , தன் தந்தையின்  மாத  சம்பளத்தை  விட அதிகம் வாங்கும்  ஒரு பையனோ  பெண்ணோ , சற்று  மிதப்புடன்  இருப்பது  புரிந்து  கொள்ளக்  கூடியதுதான் ! ஓரிரு வருடங்களில் சரியாய்ப்  போய்  விடக்கூடிய  ஒரு சில்லறைக்  குற்றம்தான் ! ஆனால் ,  வார  இறுதியில்  கொண்டாடப்  படும் week end    பார்ட்டிகள்தான்  இந்த BPO க்களின்  மாபெரும்  சாபக்கேடு ! சிகரெட் , மது (பொதுவாக  பீர் , பல சமயங்களில் விஸ்கி , ரம்  எனக் கொள்க !) என்றால்  இயல்பாகவே  நம் பெண்களுக்குள்ள  அருவருப்பு , வெறுப்பு , அச்சம், கூச்சம் , தயக்கம்  அத்தனையையும்  குண்டுக்கட்டாகத்  தூக்கி  வங்காள  விரிகுடாவில்  வீசிய  புண்ணியத்தை  இந்தக்  கால் சென்டர்கள்   தேடிக் கொண்டுள்ளன ! இந்திய (குறிப்பாகத்  தமிழ் ) சமூகத்தில்  கடந்த  பல  நூறு  ஆண்டுகளாக  நெறிகளில்  மெல்ல  மெல்ல  ஏற்பட்ட   சீரழிவை  , நான்கைந்து  வருடங்களிலேயே  அசுரத்தனமாக  மிஞ்சிக் காட்டிய  பெருமையும்  இவற்றையே  சாரும் ! புகை , பீர்  மற்றும்  ரம் , விஸ்கி போன்றவை  தண்ணீர்   போலப்  புழங்கும்  ஒரு சூழலில் , ஆண்கள்  பெரும்பாலானோர்  தன் வயம்  இழந்த  சூழ்நிலையில் , திருமணம்  ஆகாத  பெண்கள்  வளைய  வருவது  மேல்தட்டு  வர்க்கத்துக்கு  வேண்டுமானால்  சரிப்பட்டு  வரலாம்  ! என்னதான்  கை  நிறைய  சம்பாதித்தாலும்   இந்தப்  பெண்ணுக்கு  நல்ல  மண வாழ்க்கை  அமைய   வேண்டுமே  என்ற  அக்கறையுள்ள  மத்யமர்களுக்கு  எந்நாளும்   ஒத்து  வராது  !

மறைந்த எழுத்தாளர்  சுஜாதா  ஒருமுறை  எழுதியது  போல்  ‘நம்  ஆட்களுக்கு  அளவாகக்  குடிக்கவும்  தெரியாது !’ இன்றுதான்  உலகின்  கடைசி  நாள்  என்பது  போல்  அரக்கத்  தனமாகக்  கொண்டாடப்  படும்  இந்த  வார  இறுதிப்  பார்ட்டிகளில்  பெண்கள்  பலரும்  குடித்து  விட்டு  ‘அவுட் ’  ஆகி  விழுவதும் , ‘கால்  சென்டரில்  இதெல்லாம்  சகஜமப்பா !’ என்று  சில  தடியன்கள்  அவர்களை  ‘க்வாலிஸ்  ’ வண்டியில்  தூக்கி  வந்து  வீட்டில்  பெற்றோரிடம்  நடு நிசியில்  தள்ளி விட்டுப் போவதும்  எத்தனையோ வீடுகளில்  நடக்கின்றன ! காலையில்  அதே  பெண்  எழுந்து , தேள்  கொட்டிய  திருடனாய்    இருக்கும்  பெற்றோர்  மற்றும்  சகோதர  சகோதரிகளிடம்  தன்  உரிமைகளைப்  பற்றி   ஆவேசமாய்  சர்ச்சை  செய்வதையும்  கண்கூடாகப்  பார்க்க  முடிகிறதே ! பெண்களின்  ஒழுக்க  உணர்வு  தளர்ந்தால் சமூகம்  குட்டிச்  சுவராக  சில  பத்தாண்டுகளே  போதுமே ! பொருளாதார  மேதைகள்  நமக்குக்  காட்டும்  ரசவாதமான  10%   GDP வளர்ச்சிக்கு  நாம்  கொடுத்துத்  தொலைக்க  வேண்டிய  விலை  இது  என்று  புறந்தள்ளி  விட்டுப்  போக  முடியுமா  பண்பாட்டின்  இந்த  அதல  பாதாளச் சீர்கேட்டை ? நாளை  சமூகத்தை  மீட்டெடுக்க  எத்தனை மகான்கள்  முயன்றாலும்  முடியுமா ? துரதிர்ஷ்டவசமாக , இது  போன்ற  சமுதாயச்  சிக்கல்களுக்கெல்லாம்  ‘RESET’  பட்டன்  இன்னமும்  கண்டு  பிடிக்கப்  படவில்லையே !!!

(வடக்கு வாசல் நவம்பர் 2007 இதழில் சில சிறிய மாற்றங்களோடு வெளி வந்தது)

The End

வாழிய வாலி புகழ்!

July 30th, 2008

கவிஞர் வாலி
கற்பனைத் திறனில் இவர் ஒர் ஆழி
இன்னும் நூறாண்டு வாழி!
நீயும்தான் வாழ்த்தேன் தோழி!

படித்தோம் நாம் இராமாயணத்து 
வல்லவன் வாலி
மறைந்துதான் தாக்கினான்
காவியத் தலைவன் இராமனே அன்று

பார்க்கிறோம் இன்று நாம் கவிஞர் வாலி
மறைந்தோ மறையாமலோ
தெரிந்தோ தெரியாமலோ
குறிவைத்தோ வைக்காமலோ
யாரும் தாக்க முடியுமா இவரை?
காலம் தேய்க்க முடியுமா இவர் புகழை?

 சினிமா விரும்பி
(சமீபத்தில் வெப்துனியா தமிழில் வெளி வந்தது )

The End